சுயம்புமானவள் – 0 2 “ பிரவீ, மிருதுளா ரெடி ஆயிட்டிங்களா? “ எனக் கேட்ட படியே மாடிப்படிகளிலிருந்து கீழே இறங்கி கொண்டிருந்தவனை அதுரமாக அவன் தாய் கோதை பார்த்து கொண்டிருந்தார். அவர்களை பார்த்தும் பார்க்காததை போல முகம் திருப்பிச் சென்றான். முகம் வாடினாலும் அதை மறைத்து மீராவிற்கு கண் காட்டினர். அதை புரிந்தவளாக, “ கிருஷ்ணா !! வா, சாப்பிடலாம்” என்றழைத்தாள். “அண்ணி !! பசங்க சாப்பிடங்களா! “ எங்கே காணோம் என்றான். அவன் அண்ணி என்று அழைத்ததும் நெஞ்சில் சுருக்கென்றது. அதை மறைத்து, “சாப்பிட்டாங்க, நீ சாப்பிடு “ என்றாள். அவள் முகபாவனை வைத்தே கண்டு கொள்பவன் அவள் வருத்தத்தையும் அறிந்தான். இருந்தும் நீ என்னை ஏமாற்றியதற்கு உனக்கு தேவைத்தான் என எண்ணிக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தான். அவன் சாப்பிட ஆரம்பித்ததும் அவனிடம் மறைத்த ஒரு உண்மைக்காக மானசிகமாக மன்னிப்பை கேட்டாள். ஆபீஸ் கிளம்பி ரெடியாக வந்த கணவனை கண்டவள், மதிய உணவை அளித்தாள். “கிருஷ்ணா!! பசங்களை நீ கூப்பிட்டு போறாய்! இல்ல நா விடனுமா?” என்று பேச்சை ஆரம்பித்தான். “ இல்லை அண்ணா !! நான